தங்கையின் கணவருடன் சேர்ந்து பேருந்தில் அக்கா செய்த செயல்!!

840

தமிழகத்தில் தங்கை கணவருடன் சேர்ந்து பேருந்தில் கைவரிசை காட்டிய அக்காவை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை, பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விஜயா (38), வடபழனியில் பூ வியாபாரம் செய்து வரும் இவர், நேற்று வழக்கம் போல் பூந்தமல்லியிலிருந்து வடபழனிக்கு மாநகரப் பேருந்தில் சென்றுள்ளார்.

அப்போது அவரது அருகில் இருந்த பெண் ஒருவர், கைக் குழந்தையுடன் பேருந்தில் உட்கார்ந்து இருந்துள்ளார். குழந்தையை பார்த்தவுடன் விஜயா கெஞ்சிய போது, உடனடியாக அந்த பெண் குழந்தையை அவரிடம் கொடுத்துள்ளார்.

அந்த நேரத்தில் அப்பெண் விஜயா கைப்பையில் வைத்திருந்த 1 சவரன் தங்க நகை மற்றும் 700 ரூபாய் ரொக்கப் பணத்தை திருடுவிட்டு அவசர அவசரமாக பேருந்து நின்றவுடன் கீழே இறங்கியுள்ளார்.

இதை அறிந்த அப்பெண் உடனடியாக கூச்சலிட்டதால், அங்கிருந்த பொலிசார் அவரை மடக்கி பிடித்துள்ளனர். அவர் இறங்கிய போது கூடவே மற்றொரு ஆணும் வேகமாக இறங்கியதால், பொலிசார் அவரையும் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களிடம் சோதனை செய்த போது, நகை மற்றும் பணம் போன்றவைகள் இருந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரதி (32) என்பதும் உடன் வந்தவர் அவரது தங்கை கணவர் பிரபாகர் (30) என்பதும் தெரியவந்தது.

ரதி இவ்வாறு குழந்தையுடன் பேருந்தில் பயணம் செய்து, பெண்களின் பர்ஸ் மற்றும் கைப்பையைத் திறந்து, நகைகள் மற்றும் பணத்தைத் திருடி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.