சிறுமியை பாலியல் வல்லுறுவுக்கு உபட்படுத்தி விகராதிபதி கைது!!

298

childசிறுமி ஒருவரை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்திய நிக்கவெரட்டிய சேனாநாயக்கபுர விகராதிபதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

11 வயதுடைய சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குறித்த விஹாராதிபதி கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் வல்லுறுவு உட்படுத்தப்பட்ட சிறுமி ஹலம்ப பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்டவர் எனவும் இதற்கு முன்னரும் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது வைத்திய சிகிச்சைக்காக நிக்கவெரட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சேனாநாயக்கபுர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.