பண்டாரவளை பஸ் விபத்தில் 9 பேர் பலி, 18 பேர் படுகாயம்!!

273

bandarawelaபண்டாரவளை, பூணாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் 18 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் குடை சாய்ந்து இவ் விபத்து நேர்ந்துள்ளது.