வவுனியா உட்பட வடபகுதி மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

595

வடமாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இன்றும் நாளையும் கடும் வெப்பத்துடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதனால் குறித்த மாவட்ட மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றரிலும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 7 ஆம் திகதி காலை வரை மழையுடனான காலநிலை சில பகுதிகளில் நீடிக்கும் என அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.