மாங்குளம் – பனிச்சங்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதிக வேகத்தின் காரணமாக பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 33 வயதான முத்து ரெஜிதரன் என்ற இளைஞர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைகள் நேற்று இடம்பெற்றதுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.