பல கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மூவரும் நேற்று மாலை விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து ஐந்து கோடிக்கும் மேலான பெறுமதியுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விமான நிலைய கழிப்பறைக்குள் வைத்து தங்கத்தை கைமாற்ற முயற்சித்த போது குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பகுதியை சேர்ந்த ஒருவரும், இந்திய பிரஜைகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.