பலாத்காரம் செய்யப்பட்டு பெற்றோர் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி!!

528

கத்துவா சிறுமி சம்பவத்தையடுத்து தற்போது மற்றொரு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் Chatra மாவட்டத்தில் உள்ள Rajakendua என்ற கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இருந்த அனைவரும் திருமணத்திற்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து குடும்பத்தினர் பஞ்சாயத்தில் புகார் அளித்ததையடுத்து, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 150 தோப்புக்கரணம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50,000 பணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது.

இந்த தீர்ப்பால் கோபமடைந்த குற்றவாளிகள், பஞ்சாயத்து முடிந்த பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்று, குடும்பத்து உறுப்பினர்களை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் முன்னிலையிலேயே சிறுமியை தீவைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சிங், ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் எஞ்சிய குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.