இந்தியாவில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான 60 வயது ரிக்ஷா டிரைவர் சுப்பையா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திராவின் குண்டூரில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, குற்றவாளிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.
நேற்று முதல் அசாதாரண சூழல் நிலவிய நிலையில், குற்றவாளியான சுப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகனுக்கு போன் செய்த முதியவர், நான் என்ன காரியம் செய்துவிட்டேன், என்னால் உனக்கு அவமானம், நான் வாழவே தகுதியற்றவன் என கூறியபடியே போனை துண்டித்துள்ளார்.
குண்டூரிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் மரத்தில் தொங்கிபடியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.






