இரணைமடு விமான ஓடுபாதை 15ம் திகதி ஜனாதிபதியால் திறப்பு..

485

Eranai

இரணைமடு விமான ஓடுபாதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் எதிர்வரும் 15ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகள் வசமிருந்த இரணைமடுவில் 2009 ஒகஸ்ட் 14ம் திகதி இராணுவத்தினரின் கொடி ஏற்றப்பட்டது.

2011 ஒகஸ்ட் 3ம் திகதி இரணைமடு விமானப்படை முகாமாக மாறியது. அதன் பின்னர் அங்கு விமான ஓடுபாதை அமைக்கும் பணி 2012இல் ஆரம்பிக்கப்பட்டது. ஓடுபாதைக்கு காபட் இடும் பணி கடந்த ஏப்ரலில் ஆரம்பமானது.

சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான ஓடுபாதை 1500 மீற்றர் நீலமும் 25 மீற்றர் அகலமும் கொண்டதாகும்.
மாங்குளம், அம்பகாமம், ஒலுமடு மற்றும் கிளிநொச்சி, வட்டக்கச்சி, ராமநாதபுரம் வழியாக இந்த விமான ஓடுபாதையை அடைய முடியும்.

இந்த ஓடுபாதை அமைப்பு பணியில் முற்றுமுழுதாக இலங்கை விமானப்படையினரே ஈடுபட்டனர்.