அமெரிக்காவில் மென்பொறியாளரை சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!!

1515

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளரை சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கான்சாஸில் மென்பொறியாளராக பணியாற்றியவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(வயது 32), இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கான்சாஸில் உள்ள மதுபான விடுதியில் நண்பர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சியில் கூடைப்பந்தாட்ட போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியபடியே இந்தியர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதில் ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இவரது நண்பரும் காயமடைந்தார்.

விசாரணையில் ஸ்ரீனிவாஸை சுட்டது ஆடம் புரிண்டோன்(வயது 52) என்பதும், கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை கான்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி Charles Droege, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.