இந்தியாவை அடுத்து இலங்கையையும் மணல் புயல் தாக்கும் பேராபத்தா?

683

கடந்த வாரத்தில் இந்தியாவை தாக்கிய மணல் புயல், இலங்கையையும் தாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான தாக்கம் இதுவரை இலங்கைக்கு ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவ்வாறான ஆபத்து தொடர்பில் எந்தவொரு அறிகுறிகளும் இல்லை என திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்காண்ட் ஆகிய மாநிலங்களை மணல் புயல் தாக்கியிருந்தது. அந்த மாநிலத்தை சேர்ந்த 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூச்சுதிணறல் மற்றும் மின்னல் தாக்குதல் உட்பட, மரங்கள் முறிந்து வீழ்தமை உள்ளிட்ட காரணங்களினாலேயே மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.