நாவலப்பிட்டியில் மரத்துடன் மண் மேடு வீடு ஒன்றின் மீது விழுந்தமையினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய, கோனாவலபத்தன பிரதேசத்தை சேர்ந்த லஹிரு கமகே என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு மேல் இருந்த பாரிய மரத்துடன் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதன் போது வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. இதன்போது உயிரிழந்த இளைஞர் மற்றும் அவரது சகோதரர் டீவி பார்து கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே மண் டீவி பார்த்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
இருவரையும் மீட்ட போதிலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய சகோதரர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர். அனர்த்தம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்றிருந்தமையினால் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.












