காத்தான்குடி – பரீனாஸ் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் தாழ்வாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன முற்றாக எரிந்துள்ளதோடு வீட்டின் முன் பகுதியும் சேதமடைந்துள்ளன. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர், தனது குடும்பத்தினரோடு மேற்படி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றார்.
முன்பகை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






