கணவரும் மாமியாரும் சேர்ந்து செய்த மோசமான செயல் : உயிரை விட்ட புதுப்பெண்!!

596

இந்தியாவில் திருமணமான சில மாதங்களில் வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சன். இவருக்கும் கிரண் (20) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் கிரண் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பொலிசார் விசாரித்து வந்த நிலையில் கணவர் குடும்பத்தார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

இது குறித்து கிரணின் தந்தை கைலாஷ், குல்சன் மற்றும் அவரின் பெற்றோர்களான பாபி, பண்ட்டி மற்றும் இன்னும் நான்கு பேர் மீது புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து 7 மீதும் வழக்குப்பதிவு செய்த பொலிசார் குல்சன் மற்றும் அவர் பெற்றோரை தற்போது கைது செய்துள்ளனர்.