ஐஸ்வர்யா ராய்க்கு கணவர் அளித்த பிறந்தநாள் பரிசு!!

451

iceபொலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையான ஐஸ்வர்யா ராய் கடந்த 1ம் திகதி தனது 40வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அப்போது நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கணவர் அபிஷேக் பச்சன் அவரது பிறந்த நாளுக்கு அளித்த சிறப்பு பரிசு குறித்து நிருபர்கள் கேட்டனர்.

கணவர் தனக்கு பரிசளித்தார் என்று கூறிய ஐஸ்வர்யா அந்தப் பரிசு என்னவென்பதை அவரிடமே கேட்டுத்தெரிந்து கொள்ளுமாறும் கூறினார்.

மேலும், கணவர் தனக்கு அளித்த விலையில்லாப் பரிசு என்று அவர் தனது மகள் ஆராத்யாவைக் குறிப்பிட்டார். தனது பிறந்த நாளன்று இரவு 12 மணிக்கு தனது பெண் பிறந்தநாள் வாழ்த்து பாடலை பாடியதாக அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.

ஆராத்யா தினமும் நேரம் கழித்தே உறங்கும் பழக்கம் கொண்டிருக்கின்றாள். எனவே அன்று நள்ளிரவில் அவள் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து பாடலை பாடினாள். அது எனக்கு மிகவும் சிறப்பான தருணமாகும் என்ற ஐஸ்வர்யா முதலில் தனக்குத்தானே பாடிக்கொண்டு பின்னர் தனக்கும் வாழ்த்து பாடியதாக கூறினார்.

சென்ற மாதம் அமிதாப்பச்சன் தனது பிறந்தநாளை கொண்டாடியபோதும் அவருக்கும் ஆராத்யா பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக ஐஸ்வர்யா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.