நீர்கொழும்பில் தனியார் வங்கி ஒன்றின் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்ததாக கூறப்படும் 40 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை கொள்ளையிடப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய நீர்கொழும்பு பொலிஸார் விசாரரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வங்கியின் அதிகாரிகள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை வைக்க சென்ற போது, இயந்திரத்தில் இருந்த பணம் குறைந்திருப்பதை கண்டு அது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 2.47 மணிக்கும் 3 மணிக்கும் இடையில் ஒரு நபரே அல்லது சிலரோ இணைந்து ஏ.டி.எம். இயந்திரத்தின் பாதுகாப்பு கதவை சூட்சுமான முறையில் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 813 ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் 712 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.