தகுதியான மணமகன் கிடைக்காவிட்டால் திருமணமே செய்யமாட்டேன் : பிரியங்கா சோப்ரா!!

294

Priyanka-Chopraகடந்த 2000ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றவர் பிரியங்கா சோப்ரா. இதையடுத்து இந்தி படங்களில் கதாநாயகியாக இன்று வரை நடித்து வருகிறார். தமிழிலும் தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

31 வயதாகும் பிரியங்கா சோப்ராவுக்கு தற்போது திருமண ஆசை துளிர்விட்டிருக்கிறது. இவருடைய தம்பி சித்தார்த் சோப்ராவுக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறவிருக்கிறது.

தம்பிக்கு திருமணம் நெருங்கும் வேளையில் தன்னுடைய திருமணத்தைப் பற்றியும் வாய் திறந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதுகுறித்து அவர் கூறும்போது,

நான் திருமணம் செய்வதற்கு எந்த நெருக்கடியும் இல்லை. பெற்றோரும், குடும்பத்தினரும் எனக்கு எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை. என்றாலும் எனக்கு தகுதியான மணமகனை தேடிக்கொண்டிருக்கிறேன். என்னை புரிந்து கொள்பவராகவும், பெண்களை மதிக்கத் தெரிந்தவராகவும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய முதல் கண்டிஷன்.

அப்படி எனக்கு தகுதியான மணமகன் கிடைத்தால் கட்டாயம் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் தகுதியான மணமகன் கிடைக்காவிட்டால் திருமணம் செய்யாமலேயே கடைசிவரை இருந்துவிடுவேன். தகுதியற்றவருடன் என்னால் செயற்கையாக வாழ்க்கையை கழிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.