வவுனியா நகரபிதா அரச அதிகாரிகளுடன் அவசர சந்திப்பு!!

833

 

வவுனியா நகரபிதா இ.கெளதமன் அதிரடியாக சில அரச அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா நகரபிதாவாக பொறுப்பேற்ற இ.கெளதமன் நகரின் துரித அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்குடன் அரச திணைக்களங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வு வவுனியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் கடந்த (04.05) அன்று காலை 10 மணியளவில் நகரபிதா கெளதமன் தலைமையில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் நகரசபை செயலாளர் தயாபரன் , நகரபிதாவின் ஆலோசகர் சஜீந்திரா ஆகியோருடன் மாவட்ட அரச திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததுடன் நகரின் துரித அபிவிருத்திக்குரிய சில திட்டங்கள் நகரபிதாவினால் முன்மொழியப்பட்டு அதற்கான ஆதரவுகளை அதிகாரிகள் வழங்குவதாகவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.