என்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றுவிட்டதாக காவலர் ஜெகதீஷனின் மனைவி கூறியுள்ளார்.
நெல்லையில் மணல் கொள்ளையர்கள் பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்த காவல் அதிகாரி ஜெகதீஷன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல் அதிகாரியின் மனைவியும் ஐந்து மாத கார்ப்பிணியுமான மார்க்ரெட் என் கணவரை எஸ்.பி தான் ஆள் வைத்து கொன்றுவிட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
அவர்க் கூறுகையில், இரவு என் மகனுடன் கணவர் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று வந்த அழைப்பை அடுத்து சென்ற அவர் அதன் பின் சடலமாக வந்தார்.
டி.எஸ்.பி அலுவலகத்தில் இருக்கும் போது என்னுடைய கணவர் ஒரு துப்பாக்கி கொண்டு வருவார். ஆனால், எஸ்.பி. அலுவலகத்தில் இருந்த போது துப்பாக்கி இல்லை.
என்னுடைய கணவரை திட்டமிட்டு கொன்றுவிட்டார்கள்.
எஸ்.ஐ தான் ஆள் வைத்து கொன்றுவிட்டார். மணல் கொள்ளையர்களை பிடிக்க எப்படி ஒருவர் மட்டும் செல்வார் மற்ற நான்கு பொலிசாரும் ஏன் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் செல்ல வேண்டியதுதானே என்று கதறி அழுதுள்ளார்.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும், முக்கியமான நபர் ஒருவரை பொலிசார் தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.






