கொழும்பில் குழந்தைகளை கடத்திய தந்தை!!

277

தெஹிவளை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரது இரண்டு குழந்தைகளை அவரது கணவரே கடத்திச் சென்றிருப்பதாக தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்ற அறிவுறுத்தல்படி குழந்தைகள் அவர்களது தாயாரின் பொறுப்பில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் உள்ள அவரது கணவரால் குழந்தைகள் இரண்டு பேரும் கடத்தப்பட்டிருப்பதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் என்ற அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைகளை கடத்த பயன்படுத்திய சிற்றூர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்திருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.