தந்தை திருடிய செல்லிடப்பேசியை அவரிடமிருந்து களவாடிய மகள்!!

355

செல்லிடப்பேசி ஒன்றை நபர் ஒருவர் களவாடியுள்ளார், அந்த களவாடப்பட்ட செல்லிடப்பேசியை அவரது மகள் அவரிடமிருந்து களவாடி பயன்படுத்திய போது, பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த யுவதி காதலருடன் பேசிக்கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு விபரங்களின் அடிப்படையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அம்பலான்தொட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாந்தொட்ட மாமடல பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரின் மனைவி தனித்திருந்த போது, வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கையடக்கத் தொலைபேசியையும் களவாடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

செல்லிடப்பேசி தொடர்ச்சியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தொலைபேசி அழைப்பு விபரங்களின் ஊடாக இந்த கண்டு பிடிக்க முடியாது என சந்தேக நபர் கருதியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் திருடிச் சென்ற செல்லிடப்பேசியை அவரது மகள் எடுத்து அதனை காதலருடன் பேசுவதற்கு பயன்படுத்தியுள்ளார். தொலைபேசி அழைப்பு விபரங்களின் அடிப்படையில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.