திருமணமான சில மாதங்களில் ஒன்றாக உயிரிழந்த சகோதரர்கள் : சோக சம்பவம்!!

594

தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூரில் வசித்து வரும் ராமலிங்கத்தின் மகன்களான கணேசனும், ராஜாவும் டிவி கேபிள் ஒயரை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து கணேசன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். விசாரணைக்காக வந்த பொலிசாரிடம் மின்சாரம் தாக்கியது குறித்து விளக்கமளிக்கும்போது ராஜாவும் உயிரிழந்தார்.

இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில், இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.