திருமணமான 10 நாளில் கணவனை கொலை செய்த இளம் பெண் : அழுது நாடகமாடியது அம்பலம்!!

1189

 

திருமணம் முடிந்த பத்தே நாளில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்திருக்கும் இளம் பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்லம் மண்டலை அடுத்த கடேகல்ல கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு பேஸ்புக் மூலம் சிவா என்ற இளைஞர் நண்பராகியுள்ளார்.

இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த போது, சரஸ்வதியின் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து அதே மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்த கௌரிசங்கர ராவ் என்ற இளைஞனுடன் சரஸ்வதியை அவரின் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இருந்த போதிலும் சிவா மீது கொண்ட காதல் காரணமாக அவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்வதற்கு சரஸ்வதி திட்டம் தீட்டியுள்ளார். இதனால் திருமணம் முடிந்த 10 நாட்களுக்கு பிறகு சரஸ்வதி-கெளரிசங்கர் ஷாப்பிங் சென்றுள்ளனர். பின்னர் ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர்.

தங்கள் கொலை திட்டத்தில் பணம், டீசல், விஸ்கி பாட்டில் கொடுத்து ஆட்டோ ஓட்டுநரையும் சேர்த்துக் கொண்டதால், ஓரிடத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, சரஸ்வதி இறங்கியுள்ளார்.

இதைத் தொடர்ந்து அந்த ஆட்டோவை சிவா மற்றும் ரெளடிகள் இரண்டு பேர் தொடர்ந்து வந்த நிலையில், ஆட்டோ நின்றவுடன் கெளரி சங்கரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.

எல்லாம் முடிந்த பின்பு அங்கு வந்த சரஸ்வதி எதுவும் தெரியாதது போல் கதறி அழுதுள்ளார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் சரஸ்வதியின் கைத்தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

அதில் அவர் சிவாவுடன் அதிக நேரம் பேசியது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவருடன் இருந்த கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.