சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஆறு படங்களில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவிடம் பாலியல் தொல்லை குறிப்பாக குழந்தைகளிடம் அப்படி நடந்துக்கொள்பவர்களை என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.
அதற்கு சமந்தா ‘கண்டிப்பாக அவர்களை எல்லாம் தூக்கில் போட வேண்டும்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.






