இலங்கை முழுவதும் மின்சாரம் தடைப்படும் அபாயம்!!

301

நாடு முழுவதும் மின்சார தடை ஏற்படலாம் என மின்சார சபை பொறியியலார்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கான ழுழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்கள்.

கலப்பு ஜெனரேட்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சாரச சபை பொறியியலாளர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தை நிறுத்திவிட்டு மீண்டும் வழமையை போன்று பணியில் ஈடுபடுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, மின்சார பொறியியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை மின்சார சபையினால் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சமர்ப்பிக்கப்படுகின்ற கலப்பு ஜெனரேட்டர் திட்டத்திற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு தமதமாகியமையே இதற்கு காரணமாகும்.

அதற்காக விரைவான தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் இதற்கு தீர்வு வழங்கும் வரை போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என மின்சார பொறியியலார்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மின்சாரம் தடைப்பட கூடும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நுவர்வோர்களுக்கு ஏற்படுகின்ற சிரமங்கள் தொடர்பில் அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.