வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நுளம்பு : கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்!!

889

வவுனியாவில் அண்மைக்காலங்களில் பெய்த மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது. இதையடுத்து இன்று (09.05) மாலை வவுனியா நகரில் முன்னாயத்த நடவடிக்கையினை வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையும் மலேரியா தடுப்பு இயக்கமும் இணைந்து மேற்கொண்டனர்.

அண்மையில் மாலை வேளையில் வவுனியாவில் பெய்துவரும் மழை காரணமாக நுளம்புக் குடம்பிகளில் டெங்கு பெருகும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது இதையடுத்து சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் வைத்தியர் எஸ்.லவனின் பணிப்புரையில் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.