வேறு ஒருவரை திருமணம் செய்த மனைவிக்கு, கணவன் ஊர் முழுவதும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் யாழ். மாதகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மாதகல் பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த யுவதி ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்னர் பதிவுத்திருமணம் செய்துள்ளார்.
பின்னர் தொழில் நிமிர்தம் வெளிநாட்டுக்கு சென்றுள்ளார். குறித்த இளைஞர் பெருமளவான பணம் அனுப்பி வந்த நிலையில், மனைவியை தான் வசிக்கும் நாட்டிற்கு அழைப்பதற்க்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், குறித்த யுவதி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த வெளிநாட்டில் இருக்கும் கணவன் நண்பர்கள் மூலம் தனது மனைவி இறந்து விட்டதாக தெரிவித்து ஊர் முழுதும கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளார்.







