வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (09.05) வவுனியா இந்துக் கல்லூரிக்கும், மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி மாணவிகளுக்கும் இடையே கடினபந்து போட்டி இடம்பெற்றது. இலங்கை பெண்கள் கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் ஏற்பாட்டில் வன்னி மாவட்டத்தில் மாணவிகளுக்கு இடையேயான கடினப்பந்து சுற்றுப்போட்டி முதன்முதல் நேற்றைய தினம் இடம்பெற்றது.
நேற்று இடம்பெற்ற வன்னியின் சமரை (Battle of Vanni) மன்னார் சித்தி விநாயகர் பெண்கள் அணியை எதிர்த்து விளையாடிய வவுனியா கோவில்குளம் இந்துகல்லூரியின் பெண்கள் அணி வெற்றி கொண்டது.
மு.இராதாகிருஷ்ணன் (வலயகல்விப் பணிப்பாளர்-வவுனியா தெற்கு) தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி விஜயலக்சுமி கேதீஸ்வரனும் (வடமாகாண முதலமைச்சரின் அமைச்சு செயலாளர்) சிறப்பு விருந்தினராக திருமதி அப்சரி திலகரத்தினவும் ( இலங்கை பெண்கள் கிரிகெட் கட்டுபாட்டு சபை) கலந்து கொண்டனர்.































