அதிகரிக்கின்றது எரிபொருள் விலைகள் : எரிபொருள் நிலையங்களில் நிரம்பி வழியும் வாகனங்கள்!!

691

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோக நிலையங்களில் வாகனங்கள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.

கொழும்பின் ஹெவ்லொக் வீதி எரிபொருள் நிலையமொன்றில் சுமார் அரைக் கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் வரிசையில் காத்துக் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக பொலிஸ் மைதானம் தொடக்கம் ஹெவ்லொக் டவுண் வரையான பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோல் 20 ரூபாவினாலும், டீசல் 09 ரூபாவினாலும், மண்ணெண்ணெய் 40 ரூபாவினாலும் லீட்டர் ஒன்றுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிபொருளின் விலைகளில் திடீர் மாற்றம்..

இலங்கையில் எரிபொருள் விலை சூத்திரத்தை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதற்காக நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது. இதனையடுத்து ஈரான் மீது அமெரிக்கா தடை விதிக்க வாய்ப்புகள் உள்ளது.

இதன் காரணமாக எரிபொருளின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஒரு லீற்றர் பெற்ரோல் 20 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசல் 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் மண்ணெண்ணை 40 ரூபாவினாலும் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.