வவுனியாவின் முன்னாள் மாவட்ட செயலர் கணேஷ் இயற்கை எய்தினார்!!

655

வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் முன்னாள் மாவட்டச் செயலர் கந்தையா கணேஷ் அவர்கள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

இவரது இறுதிக் கிரியைகள் கிழவி தோட்டம், கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறவுள்ளது.

வடமராட்சி பொலிகண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட அவர், அரச சேவையில் 50 ஆண்டுகளும், மாவட்டச் செயலராக 19 ஆண்டுகளாகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.