இப்படியும் பெற்றோரா : இலங்கையில் நடந்த சம்பவம்!!

578

பிள்ளைகளை அனாதை இல்லங்களில் சேர்த்துவிட்டு கணவனும் மனைவியும் பாரியளவில் ஹெரோயின் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலி, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒர் தம்பதியினரே இவ்வாறு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட இந்த தம்பதியினரை காலி பொலிஸார் நேற்று கைது செய்திருந்தனர். வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட கணவரிடமிருந்து 1906 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபரின் மனைவியிடமிருந்து 1260 மில்லி கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியினரின் ஐந்து பிள்ளைகள் காலி பகுதியை அண்டிய சிறுவர் இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபருக்கு 53 வயது எனவும், குறித்த பெண்ணுக்கு 33 வயது எனவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.