வவுனியாவில் இயங்கிவந்த மசாஜ் நிலையம் இழுத்து மூடப்பட்டது : பிரதேச சபை அதிரடி!!

456

 

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் கீழ் உள்ள நெளுக்குளம் பகுதியில் இயங்கி வந்த மசாஜ் நிலையம் வவுனியா தமிழ் தெற்கு பிரதேச சபையினால் இழுத்து மூடப்பட்டுள்ளது

இன்று காலை 11 மணியளவில் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் து.நடராஜசிங்கம்(ரவி) மற்றும் உப தவிசாளர் மகேந்திரன் தலைமையில் மேலும் சில பிரதேசசபை உறுப்பினர்களுடன் அப்பகுதிக்கு விஜயம் செய்த பிரதேச சபை குழுவினர் குறித்த மசாஜ் நிலையத்தை இழுத்து மூடியதுடன் பெயர் பலகையையும் அகற்றியுள்ளனர்.

குறித்த மசாஜ் நிலையம் பிரதேச சபையில் சரியான அனுமதி பெறாமலே இதுவரை காலமும் இயங்கி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.