இலங்கையில் அதிசய பூ : துர்நாற்றத்திற்குள் இத்தனை நன்மையா?

1397

உலகில் மிகவும் துர்நாற்றம் வீசும் மலர் எனக் கூறப்படும் கிடாரம் மலர் புத்தளம் பிரதேசத்தில் மலர்ந்துள்ளது. புத்தளம் பிரதேசத்தில் உள்ள கே.ஜீ.காந்தி என்ற பெண்ணின் வீடொன்றின் முற்றத்தில் இந்த மலர் பூத்துள்ளது.

அபூர்வ மலரை பார்க்க பிரதேச மக்கள் குறித்த வீட்டிற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். ஒரு அடி உயரத்தில் வளரும் இந்த மலரில் இருந்து துர்நாற்றம் வீசுகின்றது. இந்த மலர் நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தடுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வீக்கம், பசியின்மை, கல்லீரல் நோய், இருமல், ஆஸ்துமா, ஒற்றை தலைவலி உட்பட நோய்களுக்கு இந்த மலரின் கிழக்கு பயன்படுத்தப்படுகிறது.