யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் பரிதாபமாக பலி!!

245

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி பகுதியில் நேற்று இரவு யானை தாக்கி மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

வாகனேரி சுற்றுலா விடுதி வீதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான சிவலிங்கம் குமார் (வயது 34) என்பவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மாடுகளை மேய்த்து பட்டியில் கட்டி விட்டு பின்னர், வாகனேரி குளத்தில் குளிப்பதற்காக நேற்று இரவு சென்ற போது குளத்திற்கு வந்த யானையால் தாக்குதலுக்கு இலக்கி உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் பிரச்சினை காரணமாகவே அவர் குளத்திற்கு குளிக்க சென்றதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.