வவுனியாவில் கடும் காற்றுடன் கூடிய மழையில் உடைந்து விழுந்த வீடுகள் : உதவுமாறு கோரிக்கை!!

229

‌​

வவுனியா பரசன்குளம் இரணைஇலுப்பைக்குளத்தில் கடந்த 08.05.2018 அன்று கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையின் காரணமாக, பல குடும்பங்களின் வீடுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

இவ் அனர்த்தத்திற்கு 06 குடும்பங்களினைச் சேர்ந்த 21 அங்கத்தவர்களே முகம் கொடுத்துள்ளனர். தற்போதய நிலையில், இவர்கள் அனைவரும் நிரந்தர வதிவிடங்கள் அற்ற நிலையில் அன்றாட ஜீவியத்தை செவ்வனே கொண்டு செல்ல இயலாத நிலையில் இன்னலுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களின் நிலையினை அறிந்து உரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும் 077 – 075 5740