நாட்டையே உலுக்கியுள்ள மற்றுமொரு குழந்தையின் பரிதாப மரணம்!!

529

பதுளை – முதுமால கிளை வீதி மேல் பிரிவு பிரதேசத்தில் இரண்டு வயது குழந்தையொன்று பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

குழந்தையின் தாய் தேயிலை கொழுந்து சேகரிக்கும் பாரவூர்திக்கு தேயிலை கொழுந்து வழங்குவதற்காக குழந்தையை தனிமையில் விட்டு விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் வீடு வந்த போது , அங்கு குழந்தை இல்லாததால் அவரை தேடிய போது வீதியில் இரத்த வௌ்ளத்தில் குழந்தை கிடந்துள்ளது.

அதனை தொடர்ந்து உடனடியாக குழந்தை கஹடருப்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் குறித்த பெண் தேயிலை கொழுந்து பெற்றுக்கொடுத்த குறித்த பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.