நாட்டில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி!!

882

லுனுகம்வெஹர, எல்ல மற்றும் மீகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். லுனுகம்வெஹர – உடமத்தல பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று உந்துருளியில் மோதுண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லுனுகம்வெஹர – உடமத்தல பிரதேசத்தினை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனிடைய வீதியை கடக்கும் போது நபர் ஒருவர் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

தெமாதர பிரதேசத்தினை சேர்ந்த 39 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் பாரவூர்த்தியின் சாரதி காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீகஹவத்த – கதுபொட பிரதேசத்தில் அதி வேகம் காரணமாக உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உயரிழந்துள்ளார்.