வவுனியாவில் கஞ்சா வியாபாரியை சூட்சுமமாக கைதுசெய்த பொலிசார்!!

291

வவுனியா மகாறம்பைக்குளம் ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் மேற்கொண்ட நபர் ஒருவரை கஞ்சாவுடன் நேற்று (11.05.2018) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மகாறம்பைக்குளம், ஸ்ரீராமபுரம் பகுதியில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் நபர் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் அவரது வீட்டிற்கு கஞ்சா வியாபாரம் செய்பவர் போல பொலிஸார் சென்று நபருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டபோதே அவரது வீட்டில் வைத்திருந்த 3கிலோ 400கிராம் கேரளா கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 25 வயது சந்தேகநபரோருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவினையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.