யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டாவில் பகுதியில் வைத்து இன்று காலை வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்.
வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களே கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





