ஆடுகளத்தை பார்க்க அனுமதி மறுப்பு : ரோஹித் சர்மா அதிருப்தி!!

392

Rohit Sharmaகொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுகளத்தை பார்க்க அனுமதி மறுத்த காரணத்தினால் வருத்தத்துடன் திரும்பியுள்ளார் ரோஹித் சர்மா.

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

எப்போதுமே ஈடன் கார்டன் போட்டிகளில் போட்டியை விட முகர்ஜி போட்ட ஆடுகளம்தான் பேசப்படும் பாரபட்சமே பார்க்காமல் ஆடுகளத்தை தயார் செய்பவர் முகர்ஜி.

இந்நிலையில் ஆடுகளத்தை பார்க்க வேண்டும் என எண்ணி அருகில் சென்றுள்ளார் ரோஹித் சர்மா. ஆனால் முகர்ஜியோ, அணித்தலைவர் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் மட்டுமே ஆடுகளத்தின் அருகே போய் ஆய்வு செய்யலாம். நீங்கள் போகக் கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தி விட்டாராம்.

அவரிடம் வாக்குவாதம் செய்ய விரும்பாத ரோஹித், வருத்தத்துடன் திரும்பியுள்ளார்.