மோட்டார் சைக்கிளில் கணவனுடன் பயணித்த பெண் பலி!!

582

சம்பூர் – கட்டைபரிச்சான் பாலத்தருகில் மோட்டார்சைக்கிளொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற, உயிரிழந்த பெண்ணின் கணவன் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருவரும் சம்பூரிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணிண் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.