விடுதியில் பெண் கழுத்தறுத்து கொலை : இளைஞர் தற்கொலை : அதிர்ச்சி சம்பவம்!!

587

 

தமிழகத்தில் தங்கும் விடுதி ஒன்றில் இளம் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டதுடன், இளைஞர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையம் அருகே டி.எம்.டி என்ற தனியார் தங்கும் விடுதியில், பிரசாந்த் என்ற இளைஞர் கடந்த 10ஆம் திகதி இளம் பெண்ணொருவருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்நிலையில், நேற்று மதியம் விடுதி ஊழியர்கள் பிரசாந்த் தங்கியிருந்த அறையின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து, இன்று காலையும் ஊழியர்கள் அறைக்கதவை தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் விரைந்து வந்த பொலிசார், அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, பிரசாந்த் படுக்கையில் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.

பின்னர் குளியல் அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கே பிரசாந்துடன் தங்கியிருந்த பெண் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.

இருவரது உடல்களையும் கைப்பற்றிய பொலிசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டதில், பிரசாந்த் பதிவு செய்த முகவரி நிலக்கோட்டை கொங்கர்குளம் பகுதி என்று இருந்துள்ளது. மேலும், இது தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.