வெளிநாட்டு பிரஜைக்கு ஏற்பட்ட கோபத்தினால் இலங்கையருக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

721

முச்சக்கர வண்டி சாரதியை தாக்கியமை தொடர்பில் ரஷ்ய நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை ஹிக்கடுவ பகுதியில் வைத்து ரஷ்ய பிரஜை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிக குடிபோதையில் இருந்த ரஷ்ய நாட்டவர் ஹிக்கடுவ, நாரிகம, பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தன்னுடன் வாடகை பயணம் செல்வதற்காக முச்சரவண்டி சாரதிக்கு, ரஷ்ய பிரஜை அழைப்பு விடுத்துள்ளார். அதிக குடிபோதையில் இருந்த வெளிநாட்டவரிடம் பணம் கிடைக்காதென என எண்ணிய சாரதி அந்த பயணத்தை நிராகரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த ரஷ்ய பிரஜை குறித்த முச்சக்கரவண்டி சாரதி மீது கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது