வவுனியாவில் வடிகால் சீரமைப்புப் பணிகள் மந்த கதியில் : மக்கள் விசனம்!!

302

வவுனியாவில் கால்வாய், வடிகால்கள் சீரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் அப்பணிகள் மந்த நிலையில் இடம்பெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முதலாம், இரண்டாம் குறுக்குத் தெருவின் பின்பகுதியிலுள்ள சூசைப்பிள்ளையார்குள வீதிகளில் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மாலை வேளைகளில் பெய்துவரும் மழையினால் குப்பைகள் வடிகால்களுக்குள் செல்லாது அடைத்துள்ளதால் துர்நாற்றம் வீசுவருகின்றது. இதனால் அப்பகுதியால் போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாமலுள்ளதாகவும் வர்த்தக நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்றுவருவதில் பெரும் இடரினை எதிர்கொண்டுள்ளதுடன்,

ஒரு மாதத்திற்கு மேலாக இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் இதனை உடனடியாக சீர் செய்வதுடன் பொதுமக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உறுதிப்படுத்துமாறு வியாபார நிலைய உரிமையாளர்கள் கோரியுள்ளார்கள்.