வவுனியாவில் கொட்டும் மழையிலும் முள்ளிவாய்க்கால் தினம் அனுஸ்டிப்பு!!

678

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையில் நேற்று (13.05.2018) மாலை 6 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் , முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள், வவுனியா மாவட்ட சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்ததின்போது உயிரிழந்தவர்களுக்கான ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன் மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.