வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள தாய் சேய் குடும்ப நல நிலையத்திற்கு இன்று காலை 7.30 மணியிலிருந்து கால் கடுக்க நீண்டநேரம் காத்திருக்கும் தாய்மார்கள், சிறுவர்கள் என 30இலிருந்து 35ற்கும் மேற்பட்டோர் காத்திருந்ததுடன் இன்று தடுப்பு மருந்து எடுத்து வராததன் காரணமாக பல மணிநேரம் காத்திருந்துவிட்டு தாய்மார்கள் வீடு திரும்பியுள்ளனர்.
எனினும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சமூகமளித்த நிலையிலும் தடுப்பூசி வரவின்மை காரணமாக தடுப்பூசி போட முடியவில்லை என்று தெரிவித்தனர்.
பல கிராம கிராமங்களை உள்ளடக்கியதுடன் பல்லாயிரக்கணக்கான மக்களையும் உள்ளடக்கிய கிராமான மகாறம்பைக்குளம், ஆலடி பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள குடும்பநல நிலையத்தில் இன்று இவ்வாறான ஒரு துயர நிலை ஏற்பட்டுள்ளது.
பல கற்பிணித் தாய்மார்கள் தமது பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வந்து வைத்தியர்கள், தடுப்பூசி கொண்டு வரவின்மை காரணமாக ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்கள். மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்புமிக்க வைத்தியத்துறையில் கடமையாற்றும் வைத்தியர்களின் இச் செயற்பாடானது மக்களை மேலும் துயரமடையச் செய்துள்ளது.
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து வவுனியா சகாதார வைத்திய அதிகாரியிடம் தொடர்புகொண்டபோது, வாகனம் இன்மை காரணமாகவே இன்று தாய் சேய் நிலையத்திற்குச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.











