கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய யுவதி சடலமாக மீட்பு!!

898

காத்தான்குடி – தாழங்குடா பிரதேச கிராமமொன்றிலுள்ள தகரக் கொட்டிலில் இருந்து யுவதியொருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாழங்குடா, வேடர்குடியிருப்பு, கடற்கரை வீதியை அண்டி வாழும் சகாயநாதன் விதுசனா (வயது 17) என்பவரின் சடலமே இன்று மீட்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றியருந்ததாகவும், யுவதியின் தந்தை மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிவதாகவும் உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த யுவதி கடைசியாக இன்று காலை 8:30 மணிவரையில் தனது நண்பர்களுக்கு கைப்பேசியில் இருந்து குறுந்தகவல்களை அனுப்பியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.