வவுனியா வடக்கில் 4 பாலங்கள் மக்கள் பாவனைக்காக திறந்துவைப்பு!!

471

வவுனியா வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட கிராமங்களான மாறாவிலுப்பை, நெடுங்கேணி, பெரியமடு, பழையவாடி ஆகிய கிராமங்களின் பிரதான வீதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 4 பாலங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிதியுதவில் ஒவ்வான்றும் தலா ரூபா 28 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட பாலங்கள் மக்கள் பாவனைக்காக இன்று (14.05.2018) திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் மா.ச.உறுப்பினருமாகிய மருத்துவர் ப.சத்தியலிங்கம், மா.ச.உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், வவனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலம், மற்றும் பிரதேச சபையின் உறுப்பினர்கள், மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், பிரதேச சபையின் செயலாளர், பொதுமக்களென பலரும் கலந்து கொண்டனர்.