வவுனியாவில் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு!!

441

இலங்கை உள்ளுர் ஆழுகை நிறுவனம் மற்றும் யு.என்.டி.பி. ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் அண்மையில் தேர்ந்தேடுக்கப்பட்ட வவுனியா மற்றும் மன்னார் உள்ளுராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களுக்கான பயிற்சி கருத்தமர்வு உள்ளுராட்சி திணைக்களத்தின் ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (15.05.2018) நடைபெற்றது.

இச் செயலமர்வானது கட்சி பேதமின்றி உள்ளுராட்சி மன்றங்களின் நடைமுறைகளை உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவும், உள்ளுராட்சி மன்ற முத்திரைத் தீர்வை, நீதிமன்ற தண்டப்பணம் தொடர்பான மாகாண சபையின் வகிபாகம், பொதுக் கணக்காய்வு, உள்ளக கணக்காய்வு போன்றன பற்றிய தெளிவுபடுத்தல்களும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் வளவாளர்களாக வடமாகாண பிரதம செயலாளர் (நிதி) எஸ்.யு.சந்திரகுமாரன், பிரதி கணக்காய்வாளர் நாயகம் ஜி.தேவஞானன், பிரதி பிரதம செயலாளர் (பொறியியல்) எஸ்.சண்முகானந்தன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி எஸ்.சரோஜினி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் மொழி மூலம் இடம்பெற்ற செயலமர்வில் சிங்கள மொழி பெயர்ப்பு செய்யப்பட்டிருந்ததுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாக தெரிவித்திருந்த நிலையிலும் சுகயீனம் காரணமாக இன்றைய நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.