உலகை வியப்பில் ஆழ்த்தி உயிரிழந்த ஈழத் தமிழன் ஈழவனின் யாரும் அறியாத தருணங்கள்!!

527

 

ஜேர்மன் நாட்டில் கடந்த 10ஆம் திகதி உயிரிழந்த இளம் உதைப்பந்தாட்ட வீரர் ஈழவனின் இறுதிக்கிரியைகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன. புலம்பெயர் தமிழரான ஈழவனின் இறுதி சடங்கு நிகழ்வுகள் அனைத்தினையும் Braunschweig விளையாட்டுக் கழகம் பொறுப்பெடுத்து நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் இழப்பை அனைத்து தமிழர்கள் மாத்திரம் அல்லாமல் ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர்களும் பேரிழப்பாக கருதுகின்றனர், அத்துடன் ஜேர்மன் மிகச்சிறந்த எதிர்கால வீரனை இழந்துவிட்டது என ஜேர்மனி பத்திரிக்கைகள் பல ஈழவனின் இழப்பை பிரசுரித்துள்ளன.

ஈழவன் பாடசாலையிலும், விளையாட்டிலும் சிறப்பாக செயற்பட்டார் எனவும் ஈழவனின் பெற்றோர்கள் அவரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து தங்களை அர்ப்பணித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஈழவனின் பிரத்தியேக தகைமைகள்

14 வயதுக்கும் கூடிய பிரிவில் விளையாடியது மாத்திரம் அல்லாமல் கேப்டன் ஆகவும் இருந்துள்ளார், அத்துடன் ஜேர்மனி தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டு ஆயத்த நிலை வீரராக இருந்துள்ளார்.

ஜேர்மனியின் மிகப்பெரிய கழகங்களான Hannover 96, Schalke 04, Hamburger SV, Werder Bremen, Mönchengladbach, Wolfsburg ஆகிய கழகங்கள் ஈழவனை தமது கழகங்களுக்கு இணைப்பதற்கு முயற்சிசெய்துள்ளன.

7 வயதில் 4000 மீற்றர் தூரத்தினை சாதார வீரர்களின் வேகத்தில் ஓடி முடித்துள்ளார், அத்துடன் தடகள விளையாட்டில் முதன்மை வீரராக சிறந்து விளங்கியுள்ளார்.

மேலும், Niedersachsen மாநிலத்தில் தொடர்ந்து 3 வருடங்கள் தடகள சாம்பியனாக திகழ்ந்துள்ளார், அதன் பின்னர் கால்பந்தாட்டத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதால் அந்த துறையினை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜேர்மன் கால்பந்தாட்ட வரலாற்றில் 14 வயதில் பெரும் தொகை பணத்தினை ஒப்பந்தம் செய்ய இருந்த ஒரே ஒரு வீரர் ஈழவன் மாத்திரமே என குறிப்பிடப்படுகின்றது.

இவரது முதல் பயிற்சிவிப்பாளர் இவரது தந்தையாகும், இடக்கால்பலம் மற்றும் அதிவேகம் இவருக்கு கால்பந்தாட்டத்துறையில் பலமாக இருந்துள்ளது.

சிறிய போட்டிகளில் ஈழவன் தொடர்பான விளம்பரங்களை அவரின் பெற்றோர் தவிர்த்து வந்துள்ளனர், சர்வதேச போட்டியிலேயே ஈழவனை உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் கனவுகளுடன் பெற்றோர் இருந்துள்ளனர்.

மேலும், ஈழவனின் தந்தை இலங்கையில் பல்துறை விளையாட்டு வீரனாக இருந்துள்ளார், ஈழவன் தந்தை பிரபாகரன் சிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் திகழ்ந்துள்ளதுடன், அதேத்துறையில் தன் மகனை சாதனையாளனாக ஆக்கவேண்டும் எனும் உறுதியுடன் செயல்பட்டுள்ளார்.